இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளை!

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரை பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரணைமடுக் குளம் வான் பாய்ந்ததைத் தொடர்ந்து, திருவையாறு, வட்டக்கச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களின் வீதிகளிலும் வாய்க்கால்களிலும் பெருமளவில் மணல் மண் குவிந்துள்ளது.

மக்கள் துயரத்தில் இருக்கும் இந்த வேளையில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக டிப்பர்களில் வரும் கும்பல்கள், இந்த மண்ணை அள்ளிச் செல்வதாகப் பொதுமக்களிடமிருந்து அடுக்கடுக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சரும் ஆளுநரும், இயற்கைப் பேரிடரைப் பயன்படுத்தி இடம்பெறும் இந்தச் சட்டவிரோதச் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ எனத் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த அந்தப் பகுதிகளில் பொலிஸ் ரோந்து மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சரும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர்.

குவிந்துள்ள மணலை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக, சட்டரீதியாக அங்கிருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஒருவர், அண்மையில் டிப்பர் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

இது சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதை அமைச்சரும் ஆளுநரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பான விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து, முழுமையான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம், என உறுதியளித்தார்.

கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்துகொண்ட இச்சந்திப்பில், மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.

lax

லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்

December 14, 2025

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்

high

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு

December 14, 2025

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம்

van

ஆற்றில் கவிழ்ந்த வேன்

December 14, 2025

வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன்

ell

சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்

December 14, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக

ris

ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை

December 14, 2025

ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு

sss

யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!

December 14, 2025

சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு

19

நிவாரணம் இல்லையாயின் 1904 க்கு அழைக்கவும்

December 14, 2025

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம்

thesa

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

December 14, 2025

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன்

kank

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருவதாக உறுதி!

December 14, 2025

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ,நாடாளுமன்ற உறுப்பினர்

CEB

நெருக்கடியில் இலங்கை மின்சார சபை!

December 14, 2025

இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில்

444

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன!

December 14, 2025

எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும்

mano2

பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

December 14, 2025

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்