இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இந்திய உயர்ஸ்தானிரகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் வளர்ந்து வரும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்பு, ஈடுபாடு தொடர்பிலான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் நாட்டில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்திய நிறுவனமான Trident Chemphar Limited (TCPL) நிறுவனம், முன்னர் அரிசி இறக்குமதி செய்து அப்போது ஏற்பட்ட மோசடிகளால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.