இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பிரச்னையில்லை; சர்ச்சை கருத்துக்குக் கண்டனங்கள்!

நாட்டில் பிரதமர் மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் எந்தவித பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என அகில இந்திய சன்னி ஜமையாதுல் உலமா அமைப்பின் பொதுச் செயலாளர் கந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு பிப். 16 ஆம் தேதி பேட்டி அளிக்கும்போது, அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார்.

இது தொடர்பாக கேரள முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தக்‌ஷின கேரள ஜமைதுல் உலமா அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அரசு ஒத்துழைப்புடன் சங்பரிவார் நடத்தும் வன்முறைகளை மூடிமறைக்கும் வகையில் அபூபக்கர் பேசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”இந்தியாவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்காக சர்வதேச அமைப்புகள் கூட குரல் கொடுக்கும் வகையில், கந்தபுரம் தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி கலாசார ரீதியாகவும், உடல்ரீதியாகவும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வரும் மோசமான சூழலை இந்தியா சந்தித்து வருகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன அழிப்பைத் தூண்டும் வகையில் வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.

அபூபக்கர் செயல்பட்டுவரும் மலபார் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆர்) முதியவர் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் அறிந்தோம். அவர்கள் வெறுப்பு பிரசாரத்தை பரப்பிவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், நாட்டில் முஸ்லிம்கள் எந்தவொரு பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என அபூபக்கர் கூறுவது அர்த்தமற்றதாக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு