இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் தீர்மானமிக்க ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது. இது இலங்கையில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய ஜோ ரூட், தனது 20-வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 111 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட உயர்வுக்கு அடித்தளமிட்டார்.

இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி ப்ரூக் மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார். வெறும் 57 பந்துகளில் சதம் விளாசிய அவர், 137 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது 3-வது ஒருநாள் சதமாகும்.

இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இங்கிலாந்து அணி தனது துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹமதுவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது. அவர் 24 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தத் திணறினர். வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன்படி, 358 என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் பவன் ரத்நாயக்க, தனி ஒருவராகப் போராடி தனது முதலாவது ஒருநாள் சர்வதேச சதத்தைப் (121 ஓட்டங்கள்) பதிவு செய்தார்.

எனினும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்ததால், இலங்கை அணியால் இலக்கை அடைய முடியவில்லை. போட்டியின் 47-வது ஓவரில் சேம் கரன் பவன் ரத்நாயக்கவை போல்ட் செய்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 121 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க: 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு