யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினார்.