அழுகிய மீன்கள் மூதூரில் மீட்பு

மூதூர் – இறால்குழி பகுதியில் கருவாடு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய மீன்கள் சுகாதார அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை இன்று(05.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட மீன்கள், புழுக்கள் மொய்த்த நிலையில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதால் உடனடியாக அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்திருத்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று(05) காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது, கருவாடு தயாரிப்பதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அனைத்தும் மனிதப் பயன்பாட்டிற்கு முற்றிலும் உகந்ததல்லாத நிலையில், புழுக்கள் தொற்றுக்குள்ளாகி கடுமையான சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைகளை மீறி, இலாப நோக்கோடும் மக்களின் உயிருடன் விளையாடும் வகையிலும் இவ்வளவு பெரிய அளவிலான மீன்களைச் சேமித்து வைத்திருந்தமை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட அழுகிய மீன்கள் அனைத்தும் பொதுச் சுகாதார நலன் கருதி, அதிகாரிகளின் முன்னிலையிலேயே உடனடியாக அழிக்கப்பட்டன.

அத்துடன், இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் மற்றும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மூதூர் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.