அறுந்து விழுந்த இரும்புப் பாலம் சீர் செய்யப்படவில்லை: பிள்ளைகளை சுமந்து ஆற்றை கடக்கும் பெற்றோர்!

கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா – லிந்துலை, மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது இதனால் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

குறிப்பாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ் இயங்கும் மிளகுசேனை, ஊட்டுவெளி மற்றும் சென்டறர்கிளாஸ் போன்ற பகுதிகளில் வாழும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த சென்று வருகின்றனர்.

மேலும் சிறிய மழை பெய்து ஆற்றில் நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்று வழியாகச் செல்ல முடியாமல் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர் வரும் நாட்களில் அதிக மழை பெய்து ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடி யாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றன.

லிந்துலை, மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஆற்றில் மறுபக்கம் கரையில் தமது பாதணிகளைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டு ஆற்று நீரைக் கடந்து வந்து மீண்டும் வீதியோரங்களில் சுத்தமான நீரில் கால்களை கழுவி மீண்டும் பாதணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் காணமுடிகிறது ஆசிரியர்களும், அரசு மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் அவ்வாறே சென்று வருகின்றனர்.

இதில் பாடசாலை செல்லும் சிறிய மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கி சுமந்து கொண்டு, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிராம மக்கள் தெரிவிக்கையில்,

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம், உணவுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நுவரெலியா பிரதான நகருக்கோ அல்லது மெராயா நகருக்கோ செல்ல வேண்டும் தற்போது வெள்ளத்தில் அடித்து சென்ற பாலத்தினை இன்று வரை செய்து கொடுக்காமல் இருப்பதால் ஆற்றில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சென்று வருகிறோம்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை வாங்கிய பின்னர் தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

பலநேரங்களில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடுவதும் உண்டு ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது சுற்று வீதி வழியாக 5 கிமீ தூரம் சுற்றி முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கும் நிலையுள்ளது எனத் தெரிவித்தனர்.

எனவே உடனடியாக பாதுகாக்க சென்று வர தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனால் பலரும் பயன்பெறுவார்கள் எனவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இக்கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்