அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தையிட்டி திஸ்ஸ விகாரை என்பது நாட்டின் சட்டத்திற்கு எதிராகவும் பௌத்த தர்மத்திற்கு எதிராகவும் சிங்கள பௌத்த ஆதிக்க மன நிலையில் நின்று கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடமாகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்கள் அறவழியில் போராட்டம் நடாத்தி வரும் சூழ்நிலையில் நேற்று முன்தின (4.12.2025) போராட்டத்தின் போது பொலிசாரின் அராஜகம் சிங்கள பௌத்த அடக்குமுறை என்பதை ஆணித்தரமாக கூறுவதோடு; இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இனவாதம், மதவாதம் என்பவற்றிற்கு எதிரான அரசாங்கமாக தம்மை கூறிக் கொள்ளும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொலிசாரின் அடவாடி தனத்திற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அராஜகத்தில் ஈடுபாட்டோருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதோடு விகாரை விடயத்தில் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

கடந்த நவம்பர் மாத பௌர்ணமி தினத்தன்று தையிட்டியில் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் அப்பிரதேசத்தின் இந்து பக்தர்களை விகாரைக்கு அண்மையில் உள்ள இந்து கோவிலிலும் சட்டவிரோத விகாரையின் பிக்குவாக இருப்பவரை அவர் தாங்கி இருக்கும் சட்டவிரோத கட்டிடத்திலும் சந்தித்தேன்.

அன்று பிக்குவோடு நடந்த உரையாடலில் பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடல் ஒழுங்கு செய்தால் வருவீர்களா? என்று கேட்ட போது அதற்கு மறுத்துவிட்டார். அவர் அவ்விகாரையினதும் அப்பிரதேசத்தினதும் மதகுருவாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அழைப்பு ஏற்படுத்திய போது வந்திருப்பார்.

ஆனால் சிங்கள பௌத்த மனநிலையையும் இராணுவ பாதுகாப்புடன் இருக்கும் மனப்பாங்கையுமே காணக்கூடியதாக இருந்தது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில் தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை. நீதி கிட்டுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நீதி கேட்டு பேராடுபவர்களை அச்சுறுத்துவதற்கு பொலிசாரை கடமையில் ஈடுபடுத்துவதும் என்றுமில்லாதவாறு இம் மாதம் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாகவே தோன்றுகிறது.

சட்டவிரோத விகாரை கட்டடத்தால் நிலமிழந்து பாதிக்கப்பட்டவரின் சார்பில் நின்று நீதி கேட்டு போராடுபவர்கள் கடந்த காலங்களிலும் பாதை ஓரத்தில் தற்காலிக கொட்டில் அமைத்து போராட்டம் நடாத்தி வந்திருக்கின்றனர். இந்த கொட்டிலால் எவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

பொலிசாரின் வாகனங்களும் ஏனையோரின் வாகனங்களும் அப் பாதை வழியே சென்று வந்திருக்கின்றன. இந்த தடவை அது மக்களுக்கும் வழிபாட்டுக்கு வருகின்றவர்களுக்கும் தடையாக இருக்கின்றது என்று அதனை பலவந்தமாக பொலிசார் அகற்றியதோடு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை மனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் மதிப்பிற்கும் கௌரவிப்பதற்கும் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கவும் எந்த ஆட்சியாளர்களும் ஆயத்தமில்லை என்பதே உண்மை.

தமிழர் தம் தாயகத்தில் படையினர் மற்றும் பொலிசார் சட்டத்தை மிதித்து செயல்படுகின்றனர் என்பதற்கான சர்வதேசத்திற்கு சாட்சியாகவே தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள பௌத்தம் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டில் நாட்டின் சட்டத்தை மீறும் என்பதற்கு இது மிகப்பெரிய அடையாளமே சட்டவிரோத விகாரை கட்டடம் எனலாம்.

தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டிடத்திற்கு எதிரான அறப்போராட்டம் நீதி கிடைக்கும் வரை தொடரும். இதனை கட்சி அரசியலாக எவரும் கொச்சைப்படுத்தாது அரசியல் போராட்டமாக கருதி அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்குமாறு கூறுகின்றோம்.

அதனை விடுத்து அமைதி காத்து இனப்படுகொலை ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது என்பது எம்மை நாமே அழித்து கொள்வதாக அமையும்.

மேலும் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என அடிக்கடி கூறும் தற்போதைய ஜனாதிபதி அதனை தனது அரசியலுக்காக மட்டும் பாவிக்காது; லஞ்சம், ஊழல் என்பதற்கு மட்டும் கட்டுப்படுத்தாது இனங்களின் தனித்துவம், அவர்களின் அடையாள பாதுகாப்பு,அரசியல் உறுதி பாட்டு பாதுகாப்பு என்பதற்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எடுக்கின்றோம் என்றுள்ளது.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்