அரசாங்கத்துக்குப் பொதுபல சேனா கடும் எச்சரிக்கை

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

23ஆம் திகதி திங்கட்கிழமை இராஜகிரியவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என்றும் தெரிவித்தார்.

சோழர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற பலத்த ஆக்கிரமிப்பாளர்களால் கூட சிங்கள பிக்குகளின் வரலாற்றையோ அல்லது அவர்களின் செல்வாக்கையோ சிதைக்க முடியவில்லை என்பதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிக்குகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் சாடினார். தற்போதைய அரசாங்கம் மாத்திரமன்றி, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் காலத்திலும் பிக்குகளின் அரசியல் பங்களிப்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

தமது உரிமைகள் மற்றும் வரலாற்று ரீதியான வகிபாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் (Hansard) அறிக்கைகளின் முக்கிய பகுதிகளை அவர் இதன்போது சான்றாக முன்வைத்தார்.

தமக்கு எதிராகப் பாரியளவில் அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாகத் தமக்குள்ள அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் உண்மைத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.

“எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி எமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்த வேண்டும். எம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், அதை விடுத்து இழிவான முறையில் அவதூறு பேசாதீர்கள்” என அவர் சவால் விடுத்தார்.

மேலும், தமக்கெதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தற்போது தாம் தங்கியிருக்கும் விகாரையைப் புனரமைப்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக “ஜாதிக பின்கெட” (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் வங்கி கணக்கொன்றை அறிமுகப்படுத்தினார். விருப்பமுள்ளவர்கள் 100 ரூபாவையேனும் அந்த கணக்கில் வைப்பிலிட்டு இந்த நீதிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்