அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், இதற்கு மாற்றாக மற்றொரு வரைவு தீர்மானத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலும், ஹமாசும் பிணை கைதிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்து வருகின்றன.

இந்நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்துவது, காசாவின் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டு அமைதிப் படையை நிறுவுவது, அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக அமெரிக்காவின் மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை அமைப்பதும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே ரஷ்யா சார்பில் பாதுகாப்பு கவுன்சிலில் மற்றொரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிர்வாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப்படை ஐ.நா.,வின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், மேற்கு கரையையும், காசாவையும் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு வரைவு தீர்மானங்களும், நாளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்புக்கு வர உள்ளன. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில், குறைந்தது 9 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்களிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.

வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, தனித்தனியாக வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், இரண்டுமே நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது காசா சீரமைப்பு முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்