அமரகீர்த்தி கொலை வழக்கு; இரு தரப்பிலிருந்தும் மேன்முறையீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அரச தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு என்பன மேன்முறையீடு செய்யத் தீாமானித்துள்ளன.

கம்பஹா மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, நீதிபதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளில் இருவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.

ஆனால் அமர்வின் தலைவர் நீதிபதி, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் சந்தேக நன்மை வழங்கி அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்த சூழ்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என வலியுறுத்தி மேல் நீதிமன்றத்தை அணுகத் தயாராகி வருகின்றனர்.

அதேவேளை, இந்தக் குற்றத்தில் மேலும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியிருந்தது என்ற நிலைப்பாட்டில் சட்டமா அதிபர் உள்ளார்.

சட்டப்படி வழங்கப்பட்டுள்ள 28 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக துணை சட்டமா அதிபர் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளும் சிறை நிர்வாகம் மூலம் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கான சட்ட உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்