அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான கூட்டம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

PDNA செயல்முறை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் பிற தேசிய-சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. உட்கட்டமைப்பு சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூக தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாகத் தரவுச் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதே இச்செயல்முறையின் நோக்கமாகும்.

சமீபத்தில் நாட்டின் பல பகுதிகளில் உயிர், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் தாக்கங்கள் தொடர்பான ஆரம்ப நிலை PDNA தரவுகளை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அவசர நிவாரண நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்புக்கான கட்டத்தை எளிதாக்க PDNA செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி பணிக்குழு திட்டத்துடன் இசைவாக வலுவான மீட்பு செயல்முறையை உருவாக்குவதற்காக PDNA மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மேலும், எட்டு உபகுழுக்களை உள்ளடக்கிய அந்தப் பணிக்குழுவில், PDNA குழு முதன்மையான குழுவாக இருந்து, அதன் தலைமையின் கீழ் மற்ற குழுக்களை மேற்பார்வை செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இலக்குகளை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து குழு விரிவான கலந்துரையாடலை நடத்தியது. சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்பு தேவைகளின் கணக்கீடு, அபிவிருத்தி பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை, மற்றும் ஒருங்கிணைப்பு சவால்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டது.

நாட்டிற்கு அபாயம்-தகவல் அடிப்படையிலான, தாங்குத்தன்மை கொண்ட, நிலைத்த மீட்பு திட்டத்தை உருவாக்க PDNA செயல்முறையை மேலும் வலுப்படுத்த தொடர்ச்சியான நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைபின் அவசியம் இதன்போது முக்கியமாக வலியுறுத்தபட்டது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), ஆசிய அனர்த்த தயார்படுத்தல் மையம் (ADPC), தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை