வெற்றி தோல்வியின்றி நியூஸிலாந்துடனான டெஸ்டை முடித்துக்கொண்டது மே. தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவிருந்தது.

இந் நிலையில் இந்தப் போட்டியில் பெரும்பாலும் நியூஸிலாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 388 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தார்.

மேலும் நியூஸிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வெளிநாட்டவர் என்ற பெருமையை ஜஸ்டின் க்றீவ்ஸ் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களிலிருந்து ஜோடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஷாய் ஹோப் 5 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 140 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (268 – 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 277 ஓட்டங்களாக இருந்தபோது டெவின் இம்லக் (4) ஆட்டம் இழந்ததும் நியூஸிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கத் தொடங்கியது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ், கெமர் ரோச் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைவதைத் தவிர்த்தனர்.

இந்த இணைப்பாட்டமானது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் பதிவான அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

அத்துடன் கடைசி இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் 385 ஓட்டங்களைக் குவித்தது.

இது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 1973இல் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் நியூஸிலாந்தினால் பெறப்பட்ட 310 ஓட்டங்களே கடைசி இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய சாதனையாகும்.

மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் கெமர் ரோச் 233 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

up

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை செந்தில் தொண்டமான் பார்வை!

December 7, 2025

ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். தோட்ட

fss

கடற்படையினரின் பணி தொடர்கிறது

December 7, 2025

இலங்கை கடற்படையினர் நாயாறு களப்பின் ஊடாக பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உறுப்பினர்களை பாதுகாப்பாக

Jaf

மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடல்?

December 7, 2025

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.

Mansari

50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

December 7, 2025

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் தற்போது

pan

பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

December 7, 2025

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா

pai4

வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை!

December 7, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில்

ka

எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

December 7, 2025

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து

dddd

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

December 7, 2025

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர்

sim

கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

December 7, 2025

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான்

vs

ஜோடி சேரும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

December 7, 2025

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும்

arrest

மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

December 7, 2025

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ்

thavam

யாழ். தமிழர் சத்திரசிகிச்சைப் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

December 7, 2025

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச