நாட்டுக்குப் பெருந்தொகை நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இக்கடினமான நேரத்தில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவி, பல ஆயிரக்கணக்கான பேரிடர் பாதித்த குடும்பங்களுக்கு மிகத் தேவையான நிவாரணமாக அமையும். இது முதலாவது உதவி அல்ல என்பதை இலங்கை மக்கள் சார்பாக நான் குறிப்பிடுகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா, 100 மெட்ரிக் தொன் மருந்துகள் ஆகிய பெரும் அளவிலான நிவாரண உதவிகளை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பி வழங்கி வைத்தது.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் தமிழக அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், தமிழக முதல்வரின் பார்வை மற்றும் மனிதாபிமானப் பணி நிறைவேற தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைக்கத் தயார் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிவாரண உதவியை சாத்தியமாக்குவதில் பல அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் ஒருங்கிணைப்பும் முக்கிய பங்கு வகித்தது

குறிப்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திரு. முருகானந்தம், IAS, தமிழக பொதுச் செயலாளர் திருமதி ரீதா ஹரிஷ், IAS, தமிழக அரசின் வெளிநாட்டு தமிழர் நல ஆணையகத்தின் ஆணையாளர் திரு. வள்ளலார், IAS மற்றும் குழு உறுப்பினர்களான அப்துல்லா மற்றும் திரு. புகழ் காந்தி – NRT ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்தது.

இதேவேளை, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கும் இலங்கை சார்பாக சிறப்பு நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்த நேரத்தில் விரைவான நடவடிக்கைகளை எடுத்த இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

By C.G.Prashanthan

up

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை செந்தில் தொண்டமான் பார்வை!

December 7, 2025

ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். தோட்ட

fss

கடற்படையினரின் பணி தொடர்கிறது

December 7, 2025

இலங்கை கடற்படையினர் நாயாறு களப்பின் ஊடாக பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உறுப்பினர்களை பாதுகாப்பாக

Jaf

மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடல்?

December 7, 2025

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.

Mansari

50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

December 7, 2025

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் தற்போது

pan

பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

December 7, 2025

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா

pai4

வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை!

December 7, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில்

ka

எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

December 7, 2025

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து

dddd

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

December 7, 2025

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர்

sim

கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

December 7, 2025

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான்

vs

ஜோடி சேரும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

December 7, 2025

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும்

arrest

மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

December 7, 2025

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ்

thavam

யாழ். தமிழர் சத்திரசிகிச்சைப் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

December 7, 2025

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச