இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 81 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 1,800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 870 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.