கான்ஸ்டபிள் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் பகுதியில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இன்னுமொரு நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான கான்ஸ்டபிள், ஜனவரி 8, 2025 அன்று விடுமுறைக்கு திரும்பிய நிலையில் அதற்கு பின்னர் பணிக்கு வராததற்காக ஏப்ரல் 21 ஆம் திகதி பணிநீக்கம் உத்தரவு பெற்றுள்ளார். அவரிடம் இருந்து பொலிஸ் துறையால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளது.
சிறிதரன் எம்.பி இந்தியா விஜயம்

இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார். குறித்த மாநிலத்தில் இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்கிறார். குறித்த விஜயத்தின்போது அங்கு அரசியல், சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீர்வுகள் வழங்கப்படாமையால்; தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம் – வைத்தியர் பிரபாத் சுகததாச

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த […]
நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீள ஆரம்பம்

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், தினமும் சுமார் 6,000 உரிமங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. பற்றாக்குறையின் விளைவாக சமீபத்திய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 உரிமங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் தேங்கி நிற்கும் உரிமங்களை விரைவாக அகற்றுவதை திணைக்களம் நோக்கமாகக் […]
இளம் தம்பதியினர் கைது

பொலிஸ் உத்தரவை மீறியதற்காக மோட்டார் வாகனமொன்றினை சோதனை செய்ததில் 6,790 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனத்தின் சாரதியை பொலிஸார் நிறுத்திய நிலையில், அதனை நிறுத்தாமல் சாரதி சென்றுள்ளார். இதன்பின்னர் கலேவேல பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதியினர் திருகோணமலை உப்புவேலி பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களின் நிரந்தர வசிப்பிடம் மூதூர் பகுதியில் இருந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஹெரோயின் கடத்தலை அவர்கள் […]
சபரிமலை நடை இன்று திறப்பு: மண்டலகாலம் நாளை தொடக்கம்

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை – பிரசாத் நம்பூதிரி, மாளிகைபுறம் – மனு ஆகியோரை சன்னி தானம் முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி மகேஷ் […]
‘யுனிசெப்’ இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை ‘யுனிசெப்’ இந்தியா அமைப்பு நியமித்தது. ”யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்” என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். யுனிசெப் என்பது ஐநாவின் குழந்தைகள் நல நிதியம். உலகின் 190 நாடுகளில் இந்த அமைப்பு செ யல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவின் சார்பில், […]
கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதியின் அறிக்கைக்கு கடுமையான விமர்சனம்

கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “’குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல’ என்ற ஜனாதிபதியின் அறிக்கை, நாட்டை ஒரு கிரீடத்துடன் கூடிய முடியாட்சிக்கு திரும்பச் செய்யும் முயற்சியா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இருந்து வேண்டுமென்றே குறித்த வசனம் மட்டும் […]
செட்டிப்பாளையத்தில் மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் நள்ளிரவு வேளையில் மதிலை உடைத்துக்கொண்டு வளவொன்றினுள் லொறி ஒன்று புகுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே குருநாகல் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது. அந்தப் பிரதேசத்தில் […]
பதுளையில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பதுளையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பதுளை – ஹாலி – எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது. உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹாலி – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.