ஜப்பானின் பேருந்துகள் கையளிப்பு

கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த எட்டு (8) பெரிய தாங்கு தரைப் பேருந்துகளைக் (low-floor buses) கையளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 02 ஆம் திகதி நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ இசொமதா (H.E. Akio Isomata) இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஜப்பான் அரசாங்கத்தின் கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் மொத்தம் 362,476 அமெரிக்க டொலர் (சுமார் […]

‘தித்வா’ சூறாவளியால் சேதமடைந்த ரயில் பாதை திருத்தப் பணிகள் நவம்பரில் நிறைவு

‘தித்வா’ சூறாவளியால் சேதமடைந்த நாவலபிட்டியவிலிருந்து கம்பளை வரையிலான ரயில் பாதை மறுசீரமைப்புப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் நிறைவு செய்ய முடியும் என ரயில் பாதை மறுசீரமைப்புத் திட்டப் பொறியியலாளர் சமில ஹேரத் தெரிவித்தார். நாவலபிட்டியவிலிருந்து கம்பளை வரையிலான பகுதியில் 37 இடங்கள் சேதமடைந்த நிலையில், ரயில் திணைக்களத்தின் பணிப் பிரிவு மூலம் 30 இடங்களின் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் பொறியியலாளர் குறிப்பிட்டார். பெரிய அளவில் சேதமடைந்த 6 இடங்களின் மறுசீரமைப்புப் பணிகள், கண்டி மாவட்ட நாடாளுமன்ற […]

அமெரிக்கா – ஈரான் மீண்டும் தீவிர மோதல்

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் தீவிர மோதல் வெடித்ததால், மேற்காசியாவில் போா் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் தென்கடலோரப் பகுதிகளில் ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே அமைந்துள்ள அந்நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ரேடாா் நிலையங்கள், கடல்சாா் வளங்கள், கண்ணிவெடி அமைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடா்பு மையங்களைக் குறிவைத்து, அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல்களில் ஈரானில் ஒரே இரவில் 12 போ் உயிரிழந்ததாகவும், சிரிக் பகுதியில் திருமண வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 4 வயது குழந்தை […]

கனடாவில் நாய் கின்னஸ் சாதனை; 56 பேரை 16 விநாடிகளில் தாண்டியது!

கனடாவில் நடைபெற்ற நாய்களுக்கான தாண்டும் போட்டியில், 56 பேரை வெறும் 16 விநாடிகளில் தாண்டிய நான்கு வயதான பெண் அவுஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள பொதுமைதானத்தில் இந்த வித்தியாசமான போட்டி நடைபெற்றது. எட்மன்டன் ரிவர்ஹாக்ஸ் பேஸ்பால் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், பயிற்சி பெற்ற நாய்கள் மைதானத்தில் சற்று குனிந்த நிலையில் வரிசையாக நின்ற மனிதர்களை ஒரு நிமிடத்திற்குள் தாண்டும் சவால் இடம்பெற்றது. இதில், ஜெனிபர் […]

மேயர் வேட்பாளர்களால் வரி திட்டங்க ள் வெளியீடு!

ஒலிவியா சௌ மற்றும் அலெக்சாண்டர் குறைந்த வரி உயர்வுகளை உறுதியளிக்கின்றனர், பிராட்ஃபோர்டோ முழு திட்டத்தையும் பின்னர் வெளியிட காத்திருக்கிறார் மேயர் ஒலிவியாசௌ , மேயர் வேட்பாளர் கிறிஸ் அலெக்சாண்டர் மற்றும் கவுன்சிலர் பிராட் பிராட்ஃபோர்டு ஆகியோர் அனைவரும் சொத்து வரி உயர்வுகளை குறைவாக வைத்திருக்க விரும்புகின்றனர் ஒலிவியா சௌ வின் இரண்டாவது மேயர் பதவிக்காலம் ஜான் டோரி காலகட்டத்தில் இருந்த பணவீக்க விகிதத்திற்கு நெருக்கமான சொத்து வரி உயர்வு வாக்குறுதிக்குத் திரும்புவதைக் குறிக்கலாம். செப்டம்பர் 9-ஆம் தேதி […]

பல போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பிணை கோரியவர்கள் குறித்து நீதிமன்றம் விசாரணை

போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 455க்கும் அதிகமான சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்காக மேல்நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இருவர் குறித்து உடனடியாக விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிலால் ரணசிங்க பண்டார, குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனக் கூறப்படுபவர்களுக்குப் பிணை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இரு நபர்களும் இதனை ஒரு தொழிலாக முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளைக் பரிசீலனை செய்த பின்னரே நீதிபதி இந்த உத்தரவைப் […]

இங்கிலாந்து தொடரில் இருந்து குசல் மெண்டிஸ் நீக்கம்

இலங்கை அணி எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இருபதுக்கு – 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஶ்ரீலங்கா கிரிக்கெட் , நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர்கள் இருவரும் இன்னும் குணமடைந்து வருவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறித்த தொடரின் போது குசல் மெண்டிஸ் வலது கால் காயத்திற்கும், பிநுர […]

கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் […]

இதுவரை 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட ஒகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,962 பேரும் பதிவாகியிருந்தனர். இவ்வாண்டில் இதுவரையிலான […]

காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் கண்டுபிடிப்பு?

அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை கடற்படை சுழியோடிகளால் படகிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்த அதிவேகத் தாக்குதல் படகு 12 கடற்படை வீரர்களுடன் அங்குலான கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் அங்குலான பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகத்தின் உதவியுடன் அதில் இருந்த 11 கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். […]