இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த […]

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி இன்று ​செவ்வாய்க்கிழமை(03) வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, ஹட்டன் – ஏபோட்ஸிலி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் அன்றைய தினமே டிக்கோயா […]

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 410,470 ரூபாய் பணத்துடன் மற்றுமொரு பெண் கைது […]

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ள நிலையில், கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகிய எரிபொருள் முனையங்கள் நேற்று திங்கட்கிழமை ( 02) விடுமுறை தினத்திலும் முழுநேர விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நிலவும் அதிக கேள்வியைச் சமாளிக்கும் வகையில், கொலன்னாவை முனையத்தில் மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை […]

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 23 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கடந்த 01 ஆம் திகதி சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் மாவா, ஐஸ் போதைப் பொருள் போன்றவற்றை விற்பனை செய்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் […]

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் […]

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. சுங்கக் கட்டணங்களும் பொருளாதார அநிச்சயத்தையும் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், மாகாணங்களுக்கிடையிலான சுதந்திர வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் தேவையற்ற விதிமுறைகளையும் செலவான நிர்வாகத் தடைகளையும் அகற்றி, கடற்கரை முதல் கடற்கரை வரை […]

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் பிறந்திருக்கின்ற இந்த மார்ச் மாதத்தை மோசடி தடுப்பு மாதமாகவும் நயாகரா பிராந்திய காவல் துறை பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவான நுகர்வோர் மோசடி முறைகளிலிருந்து உங்களையும் உங்கள் வணிகத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மோசடிக்காரர்களை எப்படி புகாரளிக்க வேண்டும் என்பதை அறிந்து சட்ட அமலாக்க அமைப்புகளை அணுகி மோசடிகளைத் தடுக்க உதவுங்கள் எனவும் கனடியர்கள் மோசடிகளை அறிந்து மறுத்து […]

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளதாக கூறினார். அதன்படி, ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் திறன்களை முற்றிலுமாக அழித்தல், ஈரானிய கடற்படையை செயலிழக்கச் செய்தல், மேலும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முக்கிய இலக்குகள் என விளக்கினார். […]