கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். எந்தவொரு அதிகாரியினதும் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், கிராம மக்கள் தமக்குள்ள ஒரே ஒரு கிணற்று நீரை எத்தகைய சுத்திகரிப்புமின்றிப் பருகி வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்திற்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனம் ஒன்றினால் குழாய்க் கிணற்றுடன் கூடிய நீர்தாங்கி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. எனினும், அதிலிருந்து வெளிவரும் நீருடன் கற்கூளங்களும் (கற்பொடிகளும்) […]

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு டிராக்டர் ஒன்றில் பூஜைகளுக்காகச் சென்றுகொண்டிருந்த குழுவினர், மொனராகலை – பதுளை வீதியில் அமைந்துள்ள சுபாக்யா அந்தகொளு விவஸ்தை பாடசாலைக்கு அருகில் உள்ள பாலத்தின் மீது கடந்த 21 ஆம் திகதி அதிகாலை 12:10 மணியளவில் டிபர் லாரியொன்று மோதியதில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்தச் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 […]

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டார்.

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது நபரொருவர் தாக்கியுள்ளார். அச்சமயத்தில் அங்கு கடமையிலிருந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, அவருக்கும் தாக்குதல் நடத்தப்பட்டமையினால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. இருப்பினும், சம்பவத்தின் இறுதியில் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. […]