20 நாட்கள் வயதுடைய சிசு 100,000 ரூபாவிற்கு விற்பனை: தாய் உட்பட இருவர் கைது

புத்தளம் (2026 மே 27) – தனது 20 நாட்கள் மட்டுமேயான பச்சிளம் குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய தாய் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் ஆகிய இருவரை புத்தளம் பிரிவு குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி: பள்ளம, கம்மண்டலுவ (Kammandaluw) பகுதியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. மதுக்கடைக்கு அடிமையான ஒருவருடன் உறவிலிருந்த குறித்த இளம் தாய், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார். […]

கியூபெக்கில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக அரங்கேறிய மகப்பேறு வன்முறைகள்: புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்

கியூபெக், கனடா (2026 மே 27) – கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள பழங்குடியின (Indigenous) பெண்களுக்கு எதிராக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டாயக் கருத்தடை மற்றும் மகப்பேறு ரீதியான வன்முறைகள் குறித்து புதிய மற்றும் விரிவான ஆய்வு அறிக்கை ஒன்று இன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பாதிப்புகள்: சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 22 பெண்கள் கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஆய்வில் அந்த எண்ணிக்கை […]

கனடாவில் பாரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: இரண்டு இரகசிய ஆய்வகங்கள் முற்றுகை

பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா (2026 மே 27) – கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரேசர் பள்ளத்தாக்கு (Fraser Valley) பகுதியில் இயங்கி வந்த இரண்டு பாரிய இரகசிய போதைப்பொருள் ஆய்வகங்களை கனேடிய அரச காவல்துறையினர் (RCMP) முறியடித்துள்ளனர். சுற்றிவளைப்பு விபரங்கள்: கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி அபொட்ஸ்ஃபோர்ட் (Abbotsford), லாங்லி (Langley), பேர்னபி (Burnaby) மற்றும் சிலிவாக் (Chilliwack) ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை இலக்கு வைத்து காவல்துறையினர் விசேட சோதனைகளை முன்னெடுத்தனர். […]

பௌத்த துறவியால் அனுராதபுர சிறுமி துஷ்பிரயோகம்; நல்லூரில் ஆர்ப்பாட்டம்!

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் நடத்தப்பட்டது. அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர், ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்ட மாஅதிபர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு […]

ஐக்கிய அரபு அமீரக அணுமின் நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பு குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எந்தவொரு நாட்டையும் பெயரிடவில்லை. கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது. அதில் ஒரு ட்ரோன் பராக்கா […]

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்கு கபே அமைப்பு கண்டனம்

2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்ரமசிங்க — இந்த மூவரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து, அதை சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே அமைப்பின்) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

“அதிமுக ஒன்றிணைந்தது… தவெக அரசுக்கு அளித்த ஆதரவு அதிரடி வாபஸ்!” – எடப்பாடி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் அசுர வேக மனு!

சென்னை: “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இரண்டாகப் பிரிந்து உடைந்திருந்த அதிமுக தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ளது; புதிய தவெக கூட்டணி அரசுக்குத் தார்மீக ரீதியாக அளித்திருந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் அதிரடியாகக் கடிதம் வழங்கியுள்ளனர்.” தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக-வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு […]

பௌத்தத் துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும் – கஸ்ஸப்ப தேரர்

துறவிகளின் ஒழுக்கத்தன்மையை முதலில் சங்க நீதிமன்றங்கள் மூலமே விசாரணை செய்ய வேண்டும். அதன்பின்னரே சாதாரண நீதிமன்றத்தக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும். ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பௌத்த சாசனத்தையும் அவமதிக்கும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்லேகம ஹேமரத்ன தேரரின் சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள்; எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கஸ்ஸப்ப தேரர் மேற்கண்டவாறு […]

இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்!

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(27) அதிகாலை குறித்த சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர், பொகவந்தலாவ – பெற்றோசோ பகுதியில் மறைந்திருந்த […]

குடும்பத்தகராறு; மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்!

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி கணவன் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே […]