போதைப்பொருட்களுடன் கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் “குஷ்” மற்றும் ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது. தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாடு திரும்பிய போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்கள், நேற்று சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களில் 19 […]
கொழும்பு மெகசின் சிறைச்சாலை மரணம்: மேலும் இரு சிறைக்காவலர்கள் கைது
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் இன்று (28) மாலை கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் […]
சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது

கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது. இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் […]
விமான நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால், ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல குறைந்த கட்டண விமான நிறுவனமான ரயான் ஏர் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ’லியரி இது குறித்து கவலை வெளியிட்டுள்ளார். “கடந்த மார்ச் மாதம் ஒரு பேரல் விமான எரிபொருள் (Jet A-1) 80 டொலராக இருந்தது. ஆனால், தற்போது அது 150 […]