கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல்; 3 பொலிஸார் அடையாளம்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது
ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அதற்கமைய, நேற்று (28) அதிகாலை கெஸ்பேவ பிரதேசத்தில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால், இந்தக் குற்றச் செயலுக்குத் தேவைப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் 06 கிராம் 235 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் குறித்த கார் ஆகியவற்றுடன் […]
விவசாய காப்புறுதி மாதம் பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா அவரை, மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்கம், தீ விபத்துக்கள், நோய்கள் மற்றும் பீடைகளினால் ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்த […]
இணைய மோசடி; சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

யான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் இந்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி […]
இலங்கையில் நிபா வைரஸ்?

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து இலங்கையில் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த வைரஸால் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வழக்குகள் எழுந்தால் அதற்கு தேவையான அனைத்து சோதனை கருவிகளும் நாட்டில் உள்ளது. வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஷானி அபேசேகர குறித்து போதிய சாட்சியங்கள் இல்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு (Shani Abeysekara) எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஷானி அபேசேகர (Shani Abeysekara) நடவடிக்கை எடுக்கவில்லையென கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் குளியாப்பிட்டிய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் அவரை கைது செய்ய முடியாது. அத்தோடு அதற்கான போதிய […]
கனேடிய உயர்ஸ்தானிகர் சிறீதரன் எம்பி சந்திப்பு!

கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிபுல்ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு சிறீதரன் எம்பியால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. புதிய […]
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட பெருந்தலைவரே ரணில்
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட பெருந்தலைவரே ரணில் விக்கிரமசிங்க.அவருக்கு எங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இலண்டன் பயணம் குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(28) முன்னிலையானார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், ராஜித சேனாரத்ன, […]
ஒன்டாரியோ நீதிமன்றத்தில் சைக்கிள் பாதை அகற்றும் வழக்கு

ஒன்டாரியோவின் உச்ச நீதிமன்றத்தில் நகரின் மூன்று பகுதிகளின் சைக்கிள் பாதைகளை அகற்றும் மாகாணத்திட்டத்தை எதிர்த்து வெற்றி பெற்ற வழக்கு தொடர்பான விசாரணை இடம்பெற்றது. சைக்கிளிஸ்டுகளில் ஒரு சைக்கிள் கூரியர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்டோர், பாதுகாக்கப்பட்ட சைக்கிள் பாதைகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் சாத்தியமற்றது எனக் கூறி, அது அவர்களது பாதுகாப்பிற்கு மாறுதலற்ற அபாயம் என்பதை இப்போது வரை வெற்றி பெற்று வாதிட்டுள்ளனர். ஒன்டாரியோ நீதிமன்றம் புதன்கிழமை இந்த வழக்கில் மாகாண அரசாங்கத்தின் மனுவை […]
கனடிய மக்களுக்கு சிறந்தது என்ன என்று யோசித்து பிரதமர் கார்னி செயற்பட வேண்டும்!

வர்த்தக பேச்சுவார்த்தைகள் நெருங்கும் நிலையில் ‘நல்லொழுக்க காட்டுதல்’ (virtue signalling) நிறுத்துமாறு கார்னியிடம் ஸ்காட் பெஸ்ஸெண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தைகள் நெருங்கி வரும் நிலையில், கனடாவுக்கு எதிரான தனது வார்த்தைப் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள ட்ரம்ப் நிர்வாகம், கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸெண்ட் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “ட்ரம்ப் கணக்குகள்” (Trump Accounts) என அழைத்துள்ள, குழந்தைகளுக்கான […]