2026 முதல் சிங்கப்பூரில் விமானப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்?

சிங்கப்பூரில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

குறிப்பாக, உரிய விசா அல்லது 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ஐசிஏ தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது.

இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும். மேலும், தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக, விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

arrest

இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

December 9, 2025

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (08)

ambippid

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

December 9, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்

s

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

December 9, 2025

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர்

co

வெல்லாவெளி தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு; 56 பேருக்கு எதிராக வழக்கு

December 9, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை

com

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்…

December 9, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

in su,

வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

December 9, 2025

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை

ch

சீன போர் விமானங்கள் எமது ரேடாரை குறிவைக்கின்றன – ஜப்பான் குற்றச்சாட்டு!

December 9, 2025

ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை