பெண்கள் டென்னிஸ்; சிறந்த வீராங்கனையாக சபலெங்கா
தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை பெயரிடுவதாக சங்கம் திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரில் சம்பியனான 27 வயதான சபலெங்கா, இவ்வாண்டில் அதிகபட்சமாக நான்கு தொடர்களில் சம்பியனானதுடன், 63 போட்டிகளில் வென்றிருந்தார். அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்த சபலெங்கா, விம்பிள்டன் தொடரின் அரையிறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்தார். இதேவேளை நான்காம் நிலை […]
பொரெஸ்டிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. பொரெஸ்ட் சார்பாக கலும் ஹட்சன்-ஒடோய் இரண்டு கோல்களையும், இப்ராஹிம் சங்கரே ஒரு கோலையும் பெற்றனர். இதேவேளை சதர்லேண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் தோற்றது. சதர்லேண்டுக்கு கிடைக்கப் பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.
பிரிமியர் லீக் ஏலம்: யாருக்கு ‘ஜாக்பாட்’
இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் பங்கேற்ற 10 அணிகளில் 173 பேர் தக்கவைக்கப்பட்டனர். மீதமுள்ள 77 இடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ‘மினி’ ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது. இதில் 350 பேர் (240 இந்தியர், 110 வெளிநாட்டு வீரர்கள்) பங்கேற்க உள்ளனர். இதில் 10 அணிகள் மொத்தம் ரூ. 237.55 […]
ரஷ்ய ஏவுகணை எரிபொருள் ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்
ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு எரிவாயு பதப்படுத்தும் ஆலையை உக்ரைன் தாக்கியுள்ளது. அதேவேளை, ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ஏவுகணை எரிபொருள் உற்பத்தி செய்யும் ஆலையையும் தாக்கியதாக உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அஸ்ட்ராகான் ஆலையில் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக கியேவின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். தனித்தனியாக, உக்ரைனின் ட்ரோன் படைகளின் தலைவர், இஸ்கந்தர் மற்றும் கின்ஷால் ஏவுகணைகளுக்கு எரிபொருளை உற்பத்தி செய்யும் […]
தெற்கு பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர சிலை
தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை (15) அன்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குவைபா நகரில் பரபரப்பான வீதியில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக கடும் சூறாவளி காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் […]
18 நாட்களுக்கு பின் கிழக்கு ரயில் ஓடுகிறது…
வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்கள், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பதினெட்டு நாட்களுக்குப் பிறகு, இன்று (16) காலை முதல் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. பிரீமா மாவு நிரப்பப்பட்ட ரயில், சீன விரிகுடாவிலிருந்து சீதுவ வரையிலான பயணத்தைத் தொடங்கியது, மேலும் ரயில் அதிகாரிகள் தினசரி சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளனர். கிழக்கு ரயில் தண்டவாளத்தில் வெள்ளம் காரணமாக 28 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்னர் ரயில் தண்டவாளங்கள் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்படும் முதல் […]
முன்னாள் சபாநாயகர் ஏற்படுத்திய விபத்து சபைக்கு வருகிறது
முன்னாள் சபாநாயகர் எம்.பி. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் நீண்ட விவாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவிப்பேன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரகுமான் கூறினார். அந்த சம்பவத்தில் […]
ஒருவரைத் தாக்கி பற்களை உடைத்த பிரதேச சபை உறுப்பினருக்குப் பிணை
பொலன்னறுவை, லங்காபுர பகுதியில் ஒருவரைத் தாக்கி நான்கு பற்களை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லங்காபுர பிரதேச சபை உறுப்பினரை ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க பொலன்னறுவை மேலதிக நீதவான் ஷாலனி குணவர்தன நேற்றுதிங்கட்கிழமை(15) அன்று உத்தரவிட்டார். சர்வஜன பலய கட்சியின் ஸ்ரீலங்காபுர பிரதேச சபை உறுப்பினர் முகமது காசிம் அப்துல் சமத் பிணையில் விடுவிக்கப்பட்டவர். சந்தேக நபரை ஜனவரி 26 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அல்ஹிலால்புர தம்பல பகுதியைச் […]
ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றிய சூறாவளி
இலங்கையில் டிட்வா சூறாவளி பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 6,200 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, 96,545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீடுகள் சூறாவளியின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ளன. தற்போது, 22,348 குடும்பங்களைச் சேர்ந்த 70,297 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 731 பாதுகாப்பான மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
உயிரியல் பல்வகைமை வலய காணி அனுமதி ரத்து; விதிமுறைகளுக்கான தடை நீடிப்பு!
கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை உத்தரவு உடபலாத்த பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. டி.எம்.ஜயரத்ன ஞாபகார்த்த சமய மத்திய நிலையங்கள் மற்றும் உயிரியல் பல்வகைமை மத்திய நிலையம் என்பவற்றின் அறக்கட்டளையால் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தடை உத்தரவை மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி வரை அத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், […]