குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு
குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை 12 ஆம் திகதி சென்று, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பொறுப்பான மூத்த டிஐஜி அசங்க கரவிட்டவிடம் புகார் அளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரியின் வீட்டிற்குச் சென்ற குழு, பாராளுமன்ற […]
ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!
ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு […]
சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!
சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், “நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் – உலகில் எங்கும் […]
ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!
கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேசை சேர்ந்த 18 பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைப்பற்றப்பட்டதை அடுத்து சுமார் ஆறு மில்லியன் லிட்டர் கடத்தல் டீசல் எரிபொருளுடன் குறித்த எண்ணெய் கப்பல் ஓமன் கடலின் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கப்பல் செல்லக்கூடிய அனைத்து அமைப்புக்களும் மூடப்பட்டுள்ளன. தகவல்களின்படி, வளைகுடாவில் சட்டவிரோதமாக எரிபொருளை கொண்டு சென்றதாக கூறியே […]
சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இலங்கைக்கான அடுத்த தூதர் வேட்பாளர் எரிக் மேயர் செனட் உறுப்பினர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியப் பெருங்கடலில் உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளின் அருகே அமைந்துள்ளது. அமெரிக்க […]
ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை
காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இறந்தவர்களில் சயீத் இருப்பதாக ஹமாஸ் அல்லது மருத்துவர்களிடமிருந்து உடனடி உறுதிப்படுத்தல்களும் இதுவரை வெளியாகவில்லை சயீத் கொல்லப்பட்டமை உறுதியானால், 2026 அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததது. அதிலிருந்து ஒரு மூத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்ததில் […]
அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் என்பதைத் தவிர மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் […]
கட்சியில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் காங் தலைவர்கள்!
‘என்ன நடக்கிறது கட்சியில்…’ என, காங்., மூத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், காங்கிரசின் நிலை என்னவாகும் என, இவர்கள் கவலையில் உள்ளனர். ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல், வெளிநாடு பயணத்தில் கவனமாக உள்ளார் ராகுல்’ என, அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். சமீபத்தில், ராகுல் தலைமையில் லோக்சபா காங்., – எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பார்லிமென்டில் எம்.பி.,க்கள் எப்படி பேசினர், அடுத்து பா.ஜ.,வை அவையில் எப்படி மடக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், திருவனந்தபுரம் […]
நிர்வாக தாமதங்களால் 88 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில்லை?
மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக தாமதங்களால் தொழிலாளர்களுக்கு 1,340 கோடி ரூபாய் ஊதியம் நிலுவையில் உள்ளதாக மத்திய ஊரக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும், 88.66 லட்சம் தொழிலாளர்களுக்கு, 220 கோடி ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளது மாநில அரசு. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது […]
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியம் – சஜித் பிரேமதாச
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் சுக துக்கங்களை ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் […]