மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை 04:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை – மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவுகள் கண்டி மாவட்டம்: பாதஹேவஹெட, பாததும்பர, ஹரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனை, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்காவட கோரளை, அக்குரண, மினிபே, […]

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. […]

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு […]

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த குறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், உயிரிழப்புகள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குதல், உட்கட்டமைப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் உடனடியாகவே செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தாலும், நிலப்பயன்பாட்டு ஒழுங்குவிதிகள், உள்ளூர் தயாரிப்புகள், மீட்பு உதவிகளின் வேகம் போன்ற துறைகளில் பலவீனங்கள் வெளிப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9) இடம்பெற்றுள்ளது. கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் வயது (33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று இளைஞர்கள் நேற்று(8) மாலை குறித்த குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்றனர். இதன்போது குறித்த இளைஞன் தூண்டிலை குளத்தில் வீசியவேளை தூண்டில் முழுவதுமாக குளத்தில் […]

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாம் […]

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நேற்று (09) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிதித் திரட்டல் முயற்சியைத் தென் கொரியாவின் ஜியோன்ஜு நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இலங்கையர் ஒருவரே வழிநடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் தென் கொரியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், தான் தனிப்பட்ட முறையில் விடுத்த உதவிக்கான கோரிக்கையை […]

71 குடும்பங்கள் வெளியேற்றம்

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08) வெளியேற்றப்பட்டதாக நல்லத்தண்ணி கிராம அலுவலர் திருமதி டபிள்யூ.எம். சசிகுமாரி தெரிவித்தார். நிலச்சரிவு சுமார் 25 அடி நீளம் கொண்டது, நில வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கிராம அலுவலர் சசிகுமாரி தெரிவித்தார். வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது தற்காலிகமாக நல்லத்தண்ணி, தமிழ் வித்தியாலயம் மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்தில் தங்கியுள்ளனர், மேலும் 129 […]

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார். பத்தரமுல்ல சுஹுருபாய காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2,427 சாலை விபத்துகளில் 2,570 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே சசித் தமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேக நபர், பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பாணந்துறை பகுதியில் உள்ள தனியார் கணினி பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி […]