ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி நகரம். இங்கு இன்று (டிச 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக நிநலடுக்கம் பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை இரண்டையும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட […]

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார். ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை கடந்த நவம்பர் 8ம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் […]

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண […]

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார். கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து […]

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ஷங்கரவரபிரசாத் காரு எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையாமல் இருக்கின்றன. இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் […]

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சாமிகா கருணாரத்னவின் வழக்கறிஞர், ஆட்சேபனை தெரிவித்தார். கருணாரத்ன தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவ்வாறு செய்யாவிட்டால், குழந்தைக்கு பராமரிப்பு வழங்க உத்தரவிடக் கோரி பெண் விமானி தாக்கல் செய்த வழக்கில், புகார்தாரரின் வழக்கறிஞர் டி.என்.ஏ பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்தபோது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சாமிகா கருணாரத்ன, 100,000 ரூபாய் பிணையில் […]

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான் பிறீயைத் தொடர்ந்தே 423 புள்ளிகளைப் பெற்று பிரித்தானியாவின் நொரிஸ் சம்பியனானார். றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் நொரிஸை விட 2 புள்ளிகளே குறைவாக 421 புள்ளிகளைப் பெற்றதோடு, நொரிஸின் சக மக்லரன் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி 410 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அபு தாபியில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் முதலாமிடத்தைப் பெற்றிருந்தார். பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த […]

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது. செல்டா விகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வில்லியொட் ஸ்வெட்பேர்க் பெற்றிருந்தார். இதேவேளை வலென்சியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், செவிய்யாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹியூகோ டுரோ பெற்றதோடு, செவிய்யா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் […]

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ள நீர் ஆலைக்குள் நுழைந்ததாலும், குளிர்பதன வசதியை சீர்குலைத்ததாலும் இந்த இறைச்சி மோசமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை ஹாட்லைனில் (1926) அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. […]