யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Categoryயில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வானது கடந்த 3 ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது. இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து வந்த திறமையான இளைஞர் போட்டியாளர்கள் மத்தியில் அனுசனின், சமூகத்தையும் சூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் தனித்துவமாக வெளிப்பட்டது. இந்த வெற்றி, ஒரு சாதாரண அங்கீகாரமாக அல்லாமல் இது […]

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தையிட்டி திஸ்ஸ விகாரை என்பது நாட்டின் சட்டத்திற்கு எதிராகவும் பௌத்த தர்மத்திற்கு எதிராகவும் சிங்கள பௌத்த ஆதிக்க மன நிலையில் நின்று கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடமாகும். இதற்கு […]

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய(5) அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, கம்பளையில் மாத்திரம் 1000 பேர் உயிரிழந்ததாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து கொண்டு அவர் இதுபோல கதைகளைக் […]

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மெகொட கொலன்னாவ பகுதியில் உள்ள மக்கள் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சில வீடுகளில் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், வீடுகளை சுத்தம் செய்வதும் மிகவும் கடினமாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பலர் இன்னும் அந்த வீடுகளுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகொட கொலன்னாவ பகுதியில் சில இடங்களில், 15 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு வெள்ளம் […]

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக் கூடியவாறான சூழலினை வைத்திருந்த 09 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் […]

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டம் நேற்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் மேயர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் பின்னர் வரவு – செலவுத் திட்டம் சபை அங்கீகாரத்துக்கு விடப்பட்டது. இதன்போது ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரவு – செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்போது […]

வெள்ள அனர்த்தத்தைத் தடுப்பதற்கான திட்டம்

அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பாராட்டு, மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி சிரேஷ்ட உறுப்பினர் இரா. துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப். கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் பல விடயங்களை எந்த அரசும் செயல்படுத்ததாத செயல் திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செற்படுத்தினார். அதை வாழ்த்துகிறோம். அதேபோல […]

சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவி விலகினார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகம நகரசபை முன்னாள் தலைவரும் ரெஹான் ஜயவிக்ரம அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய திசைக்கும், தனது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கும் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிசம்பர் 6ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் எழுதிய , 2 கடிதத்தில், “நான் சுயபரிசோதனை செய்யவும், சவால்களை எதிர்கொள்ளவும், ஒரு சுயாதீனமான பாதையில் செல்லவும் இதுவே சரியான நேரம்” என்று […]

பெருக்கெடுத்தது மகாவலி கங்கை…

வரலாறு காணாத வகையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப் பாலம்) முழுமையாக உடைந்து, குறிஞ்சாக்கேனிக்கும் கிண்ணியாவுக்குமான தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மக்களின் போக்குவரத்துக்காக புதிய இயந்திர படகு சேவை ஒன்று நேற்று (5) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் எம். ஈ. எம். […]