புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம், வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை. […]

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்ற குறித்த அணி இன்று (17) 09.50 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தப் போட்டி நவம்பர் 09 முதல் 16ஆம் திகதிவரை மலேசியாவின் கோலாலம்பூரில் 19 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த […]

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

  உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர். பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், […]

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd leg) கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியைப் பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் என்டென்டே சனொய்ஸ் சென் கிரேஷன் (Sannois Saint – Gratien) கழகத்தைச் செர்ந்த ரெஜிஸ் கெனிஸ்டன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய மத்திய இடது கள வீரரான ரெஜிஸ் கெனிஸ்டன் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பெறவுள்ளார். அவரது வருகை இலங்கை […]

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது. அதனையடுத்து தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி […]

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளார்கள் என்பதை சட்ட விரோத சிலை நிறுவுதலோடு, பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதில் இருந்து அறியமுடிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். திருகோணமலையின் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்று பௌத்த துறவிகளாலும், நல்லிணக்க விரோதிகளாலும் நிறுவப்பட்டுள்ளது. சட்டவாட்சியை வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தியினரின் அமைச்சர்,முதலில் அச்சிலையை சட்டவாட்சிப்படி அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதனால், தேசியமக்கள் சக்தியின் […]

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். மனநல நோயாளி வீட்டில் இருந்தவர்களில் ஒருவர். இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் நேற்றையதினம் (17.11.2025) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கொடிகாமம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடமையில் இருக்க வேண்டிய பொலிஸ் […]

மண்சரிவு அபாயம்

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பல வீடுகள் ஆபத்தில் உள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே. பிரியங்கிகா தெரிவித்தார். நிலச்சரிவுக்கு அருகில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் வசித்து வந்த இரண்டு குடும்பங்கள் தற்போது தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நிலச்சரிவு இடம் முந்தைய சந்தர்ப்பங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடமாகும் […]

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகப்படியான நெரிசல் நிலைமை காரணமாக, சிறைச்சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. […]