நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் முக்கிய சேவைகள் வரையறைக்குள் வருகின்றன!

இலங்கையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நாளைய தினம் முதல் சில முக்கிய சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களினால் வழங்கப்படும் சில முக்கிய சேவைகளே இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மருந்தகங்களில் மருந்து கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மருந்து சீட்டுக்கள் மற்றும் தனியார் தனியார் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சீட்டுகள் என்பன வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதார துறையில் சில முக்கிய […]
அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும்

அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை விவாதத்தில் (15.11.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சில விடயங்களை எனக்கு நிரூபிக்க முடியும். ஆனால் இந்த நாட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்படும். ஆதலால் நாடாளுமன்றில் மட்டும் சில விடயங்களை குறிப்பிடுகிறேன். 88-89ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்தி […]
கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்காவை திறக்க நெருக்கடி?

கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் திறக்க அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதால், நெருக்கடிக்கு இடையே அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர். கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. 2024 அக். 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.போதுமான நிதி ஒதுக்காததால், தாமதமாகி வந்தது. கூடுதல் நிதி கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில், உலக புத்தொழில் மாநாட்டை […]
ஜி.வி பிரகாஷ் சம்பளமே வாங்காமல் இசையமைத்துள்ளாரா ?

மாஸ்க் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்கவில்லையாம். மேலும் பல படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசையமைத்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் -ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்க் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. தயாரிப்பாளராக வெற்றிமாறன் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வருகின்றார். இப்படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் கடைசி படமாம். […]
விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் LIK

விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் டிசம்பர் மாதம் LIK என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தை தயாரிப்பாளர் லலித் பார்த்துவிட்டு தில்லான ஒரு முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முழு விவரங்களை தற்போது பார்க்கலாம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியிருக்கும் LIK திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஒரு சில முறை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாக டிசம்பர் 18 ஆம் தேதி இப்படம் […]
கடும் விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்ற டியூட்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் டியூட். அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கிய இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இளம் சென்சேஷனல் மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான மற்றும் கடும் விமர்சனங்களை தான் பெற்றது. ஆனாலும் இளம் ரசிகர்களின் பேராதரவினால் டியூட் திரையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நூறு கோடிக்கு மேல் வசூலித்த டியூட் திரைப்படம் நேற்று OTT யில் […]
கருப்பு -சூர்யா 46 – அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது?

சூர்யாவின் கருப்பு மற்றும் சூர்யா 46 படங்கள் ஒரே சமயத்தில் தயாராகிக்கொண்டு வருகின்றது. இந்த இரண்டு படங்களில் சூர்யா ரசிகர்களாலும் பொதுவான ரசிகர்களாலும் அதிகம் சூர்யா ஒரே சமயத்தில் இரு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கின்றார். ஒன்று ஆர்.ஜே பாலாஜி இயக்கும் கருப்பு. மற்றொன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46. இவ்விரு படங்களில் தான் சூர்யா தற்போது நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவ்விரு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் […]
‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது

சமீப நாட்களில் நான் மனம் திறந்து கைதட்டி ரசித்த படம் ‘தி கேர்ள் பிரண்ட்’ தான் என தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’, ‘புஷ்பா-2′, ‘சாவா’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக இருக்கின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது. […]
பிரம்மாண்ட திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது – மகேஷ் பாபு

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ரூ. 1100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது. 2027 ஆம் ஆண்டுதான் வெளியீடு என்பதால் விஎஃப்எக்ஸ் தரம் ஹாலிவுட்டுக்கு சவால்விடும் வகையில் அமையலாம் எனத் தெரிகிறது. இதில், நடிகர்கள் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் என பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசிய மகேஷ் பாபு, “வாரணாசி திரைப்படம் என் […]
இலங்கை தேசிய சுத்தமான உற்பத்தி மைய விருதுகள் 2025

தலவாக்கலை டீ எஸ்டேட் பிஎல்சி நிறுவனத்தின் ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலை, தேயிலை துறை – நடுத்தர பிரிவு வகையில் தங்க விருது பெற்றுள்ளது. இவ்விருது, தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை தேசிய சுத்தமான உற்பத்தி மையத்தில் (NCPC) நடத்தப்பட்ட தேசிய சுத்தமான உற்பத்தி விருதுகள் 2025 விழாவில் வழங்கப்பட்டது. சுத்தமான உற்பத்தி, வளங்கள் திறமையாக பயன்படுத்துதல்,கழிவு குறைப்பு மற்றும் நிலைத்துத் திகழும் தொழில்துறை நடைமுறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கும் […]