சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளன?

இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். இலங்கையில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக 77 கோபுரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நாடு முழுவதிலும் குறிப்பாக கரையோர மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த சுனாமியை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் செயலிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். செய்மதி சமிக்ஞைகள் தொடர்பில் ஏற்பட்ட […]

சந்தேக நபரின் மனைவிக்கு தகவல் வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பாக சந்தேக நபரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சந்தேக நபர் குறித்த தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக கூறப்படும் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ரஞ்சித் குமார, கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் முறையான அனுமதியின்றி […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு பாரிய நட்டம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குழுமம் ஜூன் 2025 வரையிலான மூன்று மாதங்களில் 10.7 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டு 12.9 பில்லியன் ரூபாயாக இருந்தது, ஆனால் போக்குவரத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும் இயக்க இழப்புகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 51.7 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது, இது 1.5 பில்லியன் ரூபாய் அதிகமாகும், அதிக போக்குவரத்து அளவுகள் மற்றும் சுமை காரணியில் பெரிய முன்னேற்றம் […]

மக்களுக்கு அறிவுறுத்தல்

அரச அதிகாரிகள் தொடர்பில் மக்கள் மிகவும் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டிற்கு நன்மை பயக்கும்போது பாராட்டப்படாததும், அதே அதிகாரிகள் நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகளில் மட்டும் பழிக்கப்படுவதும் சரியானதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அரச ஊழியர் சரித ரத்வத்தே குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சரித ரத்வத்தே, தேசிய இளைஞர் […]

கிண்ணியாவில் நகரசபைக்காக சொந்த காணியை விட்டுக் கொடுத்த நபர்

கிண்ணியாவில் நபரொருவர் தனது காணியின் சுமார் 6 அடி பகுதியை நகரசபைக்காக விட்டுக் கொடுத்துள்ள சம்பவம் அனைவர் கவனத்தையும் பெற்றுள்ளது. கிண்ணியா – 05, பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீன்யிடம் கோரியுள்ளார். அவரோ எந்த மறுப்பும் தெரிவிக்காது […]

நாட்டில் டெங்கு நோயார்கள் அதிகரிப்பு

டெங்கு நோயார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் 11 மாவட்டங்களில் இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பதிவான கனமழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நுளம்புகளின் பெருக்கம் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவ்வாறான […]

கோட்டா கோ கம தாக்குதல்: சந்தேக நபர்கள் அடையாளம்

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 31 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்தேக நபர்களில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும், இவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்தார். மேலும், தாக்குதல் சம்பவம் நடந்தபோது, சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமை தொடர்பில் அப்போதைய சிரேஷ்ட […]

ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகருக்கு பிணை!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய நடைமுறைகளை மீறி 50 தற்காலிக நெல் சேமிப்பு அலகுகளை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 99.6 மில்லியன் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் சரித ரத்வத்தே, பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம சந்தேக நபருக்கு பிணை வழங்கினார், அவர் […]

இன்று வட்டக்கச்சி மத்திய கல்லூரி – ஸாஹிரா மோதும் கால் இறுதிப் போட்டி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள் கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளன. இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடையாத கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியும் மருதானை ஸாஹிரா கல்லூரி அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. கிளிநொச்சியிலிருந்து மாவனெல்லை, […]

பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் சிட்ரா நவாஸ் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண தெரிவு அணியில்…

இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் […]