சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் – பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி!

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (14) பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பங்கேற்புடனும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து செயற்படுத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடருக்கு இணையாக கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இங்கு கருத்துத் தெரிவித்த […]
அரசாங்கத்தால் வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியவில்லை!

ஒரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக சுகாதாரத்தையும் கல்வியையும் கருதலாம். இந்த மனித மற்றும் அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்களோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது, செயல்பாடுகள் மூலமாகவும் பாதுகாக்க வேண்டும். நமது நாட்டின் இலவச சுகாதார சேவையில் தற்போது உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன. அவ்வாறே, வைத்தியசாலைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமையினால் மக்களின் உயிருக்கு ஆபத்தும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ரூ. 31 இலட்சம் […]
நேருக்கு நேர் சந்திக்கும் புதின்- ஜெலன்ஸ்கி?.. மெனக்கிடும் டிரம்ப் – புது தகவல்!

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது. ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் […]
பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் எந்த சதியும் இல்லை – சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை!

பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர். கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது […]
ஆப்கானிஸ்தானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது. கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த […]
காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்!

இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் […]
பாக், ஆப்கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்!

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்கள் 58 பேர் இறந்தனர். இந்நிலையில், காந்தகார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கன் மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் பாக். வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். […]
பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சிறைபிடித்ததாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆப்கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன. இதில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை ஆப்கன் படைகள் அழித்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 48 […]
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் […]
ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது!

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில் புதிய சேவை, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. கேரள மாநிலத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்த வந்த நிலையில், ரயில்வே வாரியம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரையிலும இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையான அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. […]