கரூர் சம்பவம்: விஜய் கைது செய்​யப்​படு​வார்!

கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார். வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் கருத்து வெளியிட்ட அவர், ” கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கில் நீதிபதி பல்​வேறு உண்​மை​களை வெளிப்​படுத்​தி​யுள்​ளார். அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். சீமானை கேட்​டால், அவரும் 234 தொகு​தி​களி​லும் வெற்றி […]

கண்ணிவெடி அகற்றும் பணியை மீண்டும் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்!

கிளிநொச்சி – தட்டுவன்கொட்டி பகுதியில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டிப் பகுதியில் அண்மையில் வெடிபொருள்களைக் கையாண்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அ த்துடன், மேலும் சில இடங்களிலும் வெடிபொருள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, அங்கு மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்ததாவது:- “போரின் பின்னர் […]

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பணிநீக்கம்!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான நிலத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கோப் குழுவில் வௌிக்கொணரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக தற்போது தினேகா ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் கூட்டு அரசியல் சமர்!

மாகாணசபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ‘தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாணசபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர் தியாகங்களுக்கு மத்தியிலேயே இம்முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம். மாகாணசபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா என கேள்வி எழுப்படுகின்றது. இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறோம். மாகாணசபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், […]

மணிக்கு 7,400 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ‘த்வனி’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் சோதனை!

மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது. தற்​போது பிரம்​மோஸை​விட அதிவேக​மாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவு​கணையை மத்​திய பாது​காப்பு ஆராய்ச்​சி மற்றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) […]

அதிநவீன கடலோர காவல் படை ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது. இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில் உள்ள அதானி கப்​பல் துறை​முகத்தில் உள்ள தளத்​தில் இருந்து கடலோர காவல் படைக்​குச் சொந்​த​மான ரோந்​துக் கப்​பல்​கள், படகு​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், இந்த மையத்​தின் செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் வகை​யில், கோவா கப்​பல் கட்​டும் தளத்​தில் புதி​தாக தயாரிக்​கப்​பட்ட […]

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு 22 நாடுகள் இணை அனுசரணை!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையை நீடிப்பதற்கான, திருத்தப்பட்ட வரைவுக்கு இணை அனுசரணை வழங்க 22 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி வரைவுத் தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளர்களாக, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை உள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், முக்கியமாக ஐரோப்பிய நாடுகள், ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவுத் […]

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பாஜக எம்.பி. நிஷிகாந்த் வலியுறுத்தல்!

தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி 2 நாட்​களுக்கு முன்​னர் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இஐஏ பல்​லைக்​கழகத்​தில் மாணவர்​களு​டன் ராகுல் காந்தி உரை​யாடி​னார். அப்​போது அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வில் பல மதங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் பல திசைகளில் இருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய […]

பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை!

காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) […]

நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி!

பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வண்டு மொய்ந்த உணவுப்பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள், எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், பூஞ்சணமான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் […]