வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தடை உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று (08.12.2025) மீண்டும் மூன்றாவது முறையாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்ற நிலையில் இவற்றை ஆராய்ந்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் எனவும் குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவுக்குமாறு கோரி இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sr

காலநிலை; முக்கிய அறிவிப்பு

December 9, 2025

அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று

ct

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை

December 9, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த

tn

தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்

December 9, 2025

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை

indo

இந்தோனேசியாவில் தீ விபத்து!

December 9, 2025

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில்

hatt

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்

ind

பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்

December 9, 2025

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த

scoo

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு?

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள

photo-collage.png (7)

கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

December 9, 2025

கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர்.

lan

மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி

December 9, 2025

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட்

sea

உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள்

December 9, 2025

நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ வெளியிட்டுள்ளது. அதன்

ne

 ‘நெட்பிளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ இணைப்புக்கு எச்சரிக்கை!

December 9, 2025

‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு

sud

 சூடானில் ‘ட்ரோன்’ தாக்குதல்!

December 9, 2025

வட ஆப்ரிக்க நாடான சூடானில், கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து,