வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் முன் வர வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தப் பேரிடரில் பாதித்த மக்களுக்கு தொப்புள்கொடி உறவுகள் பல நேரடியாக இங்கு வந்து உதவத் தயார் நிலையில் உள்ளனர் என்று எமக்குத் தகவல்கள் கிட்டுகின்றன.

இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளில் பெரும் நெருக்கடி காணப்படுகின்றது.

எனவே இந்தப் பொருள்களை நேரடியாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்குக் கடல் வழியாகவும், பலாலி விமான நிலையத்துக்கு வான் வழியாகவும் எடுத்து வந்து பாதிப்புற்றோருக்கு அவர்களே நேரடியாக வியோகிப்பதற்கான அனுமதியையும் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு இதற்கான பரிந்துரையை வழங்கி இந்திய ட்ரோலர் படகுகளில் பொருள்களை ஏற்றிவர அனுமதி வழங்கினால் பல உதவிகளை வழங்க விருப்பம் கொண்டுள்ள எமது தமிழக உறவுகள் அதனை உடனடியாகச் செய்வார்கள்.

மன்னாரில் சோதனை நடவடிக்கைகள், சுங்க நடவடிக்கைகளில் இடையூறு இருப்பதாகக் கருதினால் காங்கேசன்துறை துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்கனவே இருப்பதனால் அனுமதியை வழங்குவதில் எந்தத் தடையும் இருக்க முடியாது எனக் கருதுகின்றோம்.

ஏனெனில் அன்பளிப்பாக வழங்க முன் வருவோர், அந்த நிவாரணப் பொருள்களின் விலையை விட போக்குவரத்துச் செலவே அதிகமாக ஏற்படும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தின் வசதி கருதியும் ட்ரோலர் படகுகளிலும் விசேட விமானங்களிலும் பொருள்களை எடுத்து வந்து விநியோகிக்க அனுமதியை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால் தமிழக உறவுகளுடன் தொடர்புகொண்டு இன்னும் அதிக உதவிகளை எம்மால் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

arrest

இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

December 9, 2025

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (08)

ambippid

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

December 9, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்

s

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

December 9, 2025

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர்

co

வெல்லாவெளி தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு; 56 பேருக்கு எதிராக வழக்கு

December 9, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை

com

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்…

December 9, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

in su,

வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

December 9, 2025

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை

ch

சீன போர் விமானங்கள் எமது ரேடாரை குறிவைக்கின்றன – ஜப்பான் குற்றச்சாட்டு!

December 9, 2025

ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை