வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் நியமனங்களுக்கு, ‘உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு’ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை ஆராயும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, குறித்த இராஜதந்திரிகள் தத்தமது பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளின் விபரங்கள்:
தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.
டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.
தயானி மென்டிஸ் – ஆஸ்திரியாவுக்கான (Austria) இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.
எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ருமேனியாவுக்கான (Romania) இலங்கையின் தூதுவர்.
என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.
எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதுவர்.
தம்மிக பெர்னாண்டோ – கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.
அநுர விதானகே – லெபனானுக்கான இலங்கையின் தூதுவர்.
பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கையின் தூதுவர்.
எம். பாரூக் எம். பௌசர் – பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி.