“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோர் பதிவு ஆரம்பம்!

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்
“டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது.

தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப்பைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

அதற்கமைய, இந்த அனர்த்தத்தின் கீழ் காணாமல் போன நபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்யக் கோரும் நபர், அந்த நபர் வழக்கமாக வசித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், அத்தகவல்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கிராம உத்தியோகத்தர் இந்தக் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிப்பார் என்பதுடன், பிரதேச செயலகத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக இது காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆட்சேபனைகள் இல்லையெனில், பிரதேச செயலாளரால் அனுமதிக்காகப் பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட வலயத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்திப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதன் கீழ், நபர் ஒருவர் காணவில்லை என்பதற்கான சான்றிதழ் கோரப்பட்டிருக்கும் போது, மேற்கூறியவாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பிரதேச செயலாளரால் ‘காணவில்லை என்பதற்கான சான்றிதழை’ வெளியிடவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகூடம் (National Archives) தெரிவிக்கிறது.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க குறிப்பிட்டார்.

sr

காலநிலை; முக்கிய அறிவிப்பு

December 9, 2025

அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று

ct

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை

December 9, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த

tn

தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்

December 9, 2025

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை

indo

இந்தோனேசியாவில் தீ விபத்து!

December 9, 2025

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில்

hatt

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்

ind

பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்

December 9, 2025

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த

scoo

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு?

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள

photo-collage.png (7)

கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

December 9, 2025

கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர்.

lan

மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி

December 9, 2025

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட்

sea

உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள்

December 9, 2025

நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ வெளியிட்டுள்ளது. அதன்

ne

 ‘நெட்பிளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ இணைப்புக்கு எச்சரிக்கை!

December 9, 2025

‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு

sud

 சூடானில் ‘ட்ரோன்’ தாக்குதல்!

December 9, 2025

வட ஆப்ரிக்க நாடான சூடானில், கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் உள்ள மழலையர் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து,