எரிவாயுவுக்கு தட்டுப்பாடு?

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்காளக நிலவி வருகின்றது.

மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு நகர் முள்ளியவளை பிரதேசம் ஒட்டுசுட்டான்,போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர் கடைகளில் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக கரையோர பகுதி மக்கள் எரிவாயுவினை நம்பியே தங்கள் சமையல் வேலைகளை செய்து வருகின்றார்கள்.

மழைவெள்ளத்தினால் விறகு கூட எடுத்துக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது பல்வேறு இடங்களுக்கு சென்றும் எரிவாயு கிடைக்காத நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் எரிவாயு விநியோகிக்கும் வணிக நிலையங்களை கேட்டபோது மழைவெள்ளத்திற்கு முன்னர் வந்த எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன என்றும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் செய்பவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

அவ்வாறு வருவதென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தான் பெரும்பாலும் எரிவாயு வருவதாகவும் பாலம் உடைத்த காரணத்தினால் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த பாலம் சீர்செய்யப்பட்டால்தான் எரிவாயு வணிக நிலையங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் இந்த பிரச்சினையினை சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மக்களுக்கான எரிவாயு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

arrest

இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

December 9, 2025

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (08)

ambippid

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

December 9, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்

s

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

December 9, 2025

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர்

co

வெல்லாவெளி தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு; 56 பேருக்கு எதிராக வழக்கு

December 9, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை

com

பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்…

December 9, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

in su,

வடக்கில் பாதிப்புற்றோருக்கு நிவாரண உதவிகளை தமிழக உறவுகள் நேரடியாக கொண்டு வர வேண்டும்

December 9, 2025

“தமிழகத் தொப்புள் கொடி உறவுகள், வடக்கில் பேரிடரால் பாதிப்புற்றோருக்கு அனர்த்த நிவாரண உதவிப் பொருள்களை நேரடியாக எடுத்து வருவதற்கான அனுமதியை

ch

சீன போர் விமானங்கள் எமது ரேடாரை குறிவைக்கின்றன – ஜப்பான் குற்றச்சாட்டு!

December 9, 2025

ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை