சஹ்ரானே ​ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பதையும், இது ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) கொள்கையினால் வழிநடத்தப்பட்ட ஒரு செயல் என்பதையும் அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) விசாரணைகள் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் உள்ள சிலர் தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட வேடிக்கையான விடயங்கள் என விமர்சித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் கொல்லப்பட்டதன் காரணமாக, அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு அமைவாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, FBI அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான சத்தியக் கடதாசியானது, தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், தாக்குதல்தாரிகளின் தொலைபேசி தரவுகள், டிஜிட்டல் சாதனங்கள், வீடியோக்கள் மற்றும் பயிற்சி முறைகள் போன்ற ஆழமான மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அந்த அறிக்கையில், சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்தத் தாக்குதலின் பிரதான மூளையாகவும் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பது ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் “ISIS-Sri Lanka” என்ற பெயரில் ஒரு பயங்கரவாத அமைப்பு இயங்கியதையும், சஹ்ரான் ஹாஷிம் அதன் சுய-பிரகடனத் தலைவராக இருந்ததையும் அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த ஐ.எஸ் தலைமைத்துவத்துடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்ததோடு, அவர்களது அங்கீகாரத்தையும் பெற்றிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தாக்குதலுக்குத் தேவையான தற்கொலை குண்டுகளைத் தயாரித்து, அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான ஒரு குழுவிற்கு, எந்தப் பள்ளியைத் தாக்க வேண்டும் என்று சுரேஷ் சலே தான் காட்டிக்கொடுத்தார் எனக் கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது என சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து ஐஎஸ் கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, ஒரு அமைப்பை உருவாக்கித் திட்டமிட்டவர்களுக்கு இலக்குகளைத் தீர்மானிக்கத் தெரியாது என்று கூறுவது முட்டாள்தனமானது எனத் தெரிவித்த அவர், இன்னும் சில நாட்களில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தைக் கண்டறியத் தெரியாமல் நாள்காட்டியைப் பார்த்துக் கொடுத்தது இன்னுமொருவர் என்று கூட இவர்கள் கூறக்கூடும் என எள்ளி நகையாடினார்.

இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளினால் சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தாம் இந்தத் தகவல்களை முன்வைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

uk

ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

March 12, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின்

sis

பாடசாலை சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

March 12, 2026

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை

anu

ஜனாதிபதி – இலங்கை மின்சார சபை தொழிற் சங்கங்கள் சந்திப்பு

March 12, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல்

s

மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

March 12, 2026

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என

ki

கனடா – ஹமில்டன் பகுதியில் ‘பியர் ஸ்ப்ரே’ பாவித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் அதிகரிக்கின்றன?

March 12, 2026

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற

drug

ஒரே நாளில் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

March 12, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை

car

கனேடிய பிரதமர் மார்க் கார்னி நேட்டோ போர் பயிற்சிக்கு விஜயம்!

March 12, 2026

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று வியாழக்கிழமை கூட்டணி நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம்

ve

இராணுவ வீரர் வீட்டில் வெடிபொருட்கள்,சீருடைகள்?

March 12, 2026

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட

a

முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

March 12, 2026

ஹட்டன் – டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில்

in

மல்லாவியில் பாம்பு தீண்டி வருமானப் பரிசோதகர் மரணம்

March 12, 2026

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (11) மாலை உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியைச் சேர்ந்த

2

தூதுவர்களின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

March 12, 2026

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின்

arre

தங்கத்தை திருட குழந்தையின் சடலத்தைத் தோண்டிய ​அவலம்

March 12, 2026

தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டி, அதிலிருந்த